அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை
சத்தி இன்றி சிவம் இல்லை
என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார ஒலியாய் தாந்திரீய சைவத்தின் உயிர் நாதமாய் இன்றும் சிவலிங்கத்தை அணைத்தபடி அன்னையவள் நாகபூசணி நாகக் குடை நிழலில் அமர்ந்திருக்கும் திருத்தலமே நயினை நாகபூசணி அம்மன் ஆலயம், அம்பாள் நாககுடைநிழலில் இருந்து அருள்பார்வை பார்க்க சிவன் தாண்டவம் ஆட உலகம் இயங்குகின்றது.