ஒருவார்த்தை மொழியடி

கண்ணாலே நீமொழிந்த
வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து
பல்லாயிரம் கவிதை
வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி .


கால்விரல்கள் தீட்டும்
கோலத்தைச் சேர்த்தெடுத்து
ரவிவர்மன் ஓவியத்தையும்
வெல்வேனடி .


நீ சிந்தும் சில்லிடும்
சிரிப்பழகை என்னுள் சேர்த்து
சரித்திரமே படைப்பேனடி .


உன் விரல்கள் காட்டும்
சைகைமொழி கண்டெடுத்து
சுந்தர நயங்கள் சொல்லும்
சாத்திரங்கள் வடிப்பேனடி .


உன் வாய்பேசும்
இன்மொழியில்
எந்தன் காதலையே
காவியமாக்கி உலகுக்கு
உவந்தளிப்பேனடி .
என்னுயிரே! ஒருவார்த்தை மொழிந்திடடி.
Written by: