"நீ நினைத்தால் . . ."

மண்ணில் உதிரும் நினைவுகள்
   மலரும் எங்கள் தீபத்தில்!
கண்ணில் தோன்றும் நிகழ்வுகள்
   பிற்காநம் கதைசொல்லுமெச்சங்கள்!
விண்ணில் பறக்கத்துடிக்கும் பட்சிகள்!
   விடிவைத் தேடிடும் நெஞ்சங்கள்!
பண்மார்பிலும் பகைவன்வேல் பாய்ந்திருக்கும்
   பறுமுதுகிலோ காயங்கள் ஆற்றிருக்கும்!
எண்ணிடில் வியப்பர் எதிரிகள்
   எங்களின்த்தின் வீரத்தை.!

மாண்புகள் கொண்டவன் தமிழன்
   அதை மாற்றானறிந்தென்ன லாபம்!
புண்புகள் அவனத சொத்து
   இதைப் பகைவன்அழித்திடப்போமோ!
வீண்புகழ் பேசா னென்றும்
   அவன் வீரமே மூச்செனக்கொள்வான்!
மண்காக்க உயிரையே மாய்ப்பான்
   மானத்தமிழனிவனென்றுலகில் மார்தட்டி நிற்பான்!
தூண்கள் பல சாய்ந்தாலும் சாயும்
   தமிழன்தேள்வீரம் இதுவரை சாநய்ததே இல்லை!

அமிழ்தெனும் எங்கள் தமிழை
   இந்த அவெனியில் கேசக் கூசோம்!
ஷஷதமிழினி மெல்லச் சாகும் || என(ச்)
   சாற்றிய கவிஞன் சொல்மாற்றுவோம்!
தமிழாசை பரவிடச் செய்வோம்
   தெருவெல்லாம் சங்கங்கள் முழுங்கிடச்செய்வோம்!
யாழினிலும் குழலினிலுமெழுமோசை கேட்போம்!
   நேசமுடன் கலைபேணி நித்தமும் காப்போம்!
ஏழிசையில் இனிய குரலோசை கேட்போம்
   நாதமொடு நடனச் சதங்கையொலி கேட்போம் மகிழ்ந்து!

கலைபேணும் தமிழின் கதிகலங்கியின்று
   கண்ணீர் விடுவதேனோ? புதுக்காவியம் படைக்கத்தானோ?
கலையா நெஞ்சுறுதியுடன் கொட்டுமவள்செந்நீர்
   கூறுமோ வரலாறு நாளை! ஏன்று தணியுமோ அவளிதயத்தாகம்
அலையாழி சூழ்நயினை கலைகள் தமிழ் வளரும் புகழ் தீவில்
   அமர்ந்தாட்சி புரிபவளே! ஆம்மை நாகேஸ்வரியே!
விலையில்லா மக்கள் உயிர் பலியாகும் நாள் தடுப்பாய்
   அதர்மங்கள் ஒழிகவென்றே! தொடரும் அனர்த்தஙக்ள போதுமென்றே!
நிலையான அமைதி தாய்மண்ணில் தினம் வேண்டி
   ஏங்கி வாடும் மக்கள் துயர் தீர்ப்பாய்! ஊன்மகிமை உலகறியச் செய்வாய்!

ஆக்கம் : நயினை அருளினி
எழுத்துருவாக்கம் : நயினை.கொம்