பூ முத்தம் நீ தந்தால்!

சின்ன இதழ் பூச்சரமே!
செம்பவளத் தாமரையே!!
சிந்துகின்ற புன்னகையில்
சித்தமது கலங்குதடி!!


அன்றலர்ந்த தாமரையே!
அழகுமலர்த் தேவதையே!
பிஞ்சுமுகம் பார்க்கையிலே
பேசும்மொழி எதுக்கடி?


முல்லை மலர்ப்பூங்கொடியே!
முத்துமணிப் பாச்சரமே!
கொள்ளையிடும் உன்சிரிப்பில்
கோடிசுகம் இருக்குதடி!!


பூவிழியின் ஓரத்திலே!
புன்னகையின் ஈரத்திலே!
பூமுத்தம் நீ தந்தால்
பூமியிலே சொர்க்கமடி!!
Written by: