முப்பொழுதுச் சொப்பனத்தில்

முப்பொழுதுச் சொப்பனத்தில்
முழு நிலவாய் வந்தவளே
யார் நினைவு வந்ததென்று
தேன் நிலவில் பாடுகின்றாய்
காற்றுமிழ்ந்த தேகமதின்
காமத்தீ ஓசை ஒன்றை
சாமத்தீ வரையிசைக்க,
ஓர்மத்தீ உழல் விடலை
யாகத்தீ சுமந்தவளே
நந்தவனப் பூக்களுக்கு
நீயின்றி நாற்றமில்லை,
காந்தர்வ மணம் கொள்ள.
சொந்தவனம் சொல்லிவிடு.
இதழோரம் இரைதேட
இமைநோக்கி விழியூரப்
பருவத்தின் களம் தந்து
போரிடையில் கொல்லிடவே
ஜாமத்தில் சாமத்து
வேதத்தில் வெண்ணிலவில்
கோதைகொள் போகத்தை
போதைக்காய்ப் பாவுக்காய்ப்
பாவைக்காய்ப் பாடுகிறாய்
அலையாடும் அரவம் கேட்டுச்
சிலைகளே சிதறும்போதும்
மலை நிகர் மனதோடின்று
மன்னவன் மணித்தேர் பார்த்து
காற்றுக்குள் முடங்கள் வைத்து
நாளைக்குள் நாழி பார்த்க
வேளைக்குள் வேந்தே வந்தான்.

அன்புடன் கங்கைமகன் - 22.03.2015

Written by: