சின்ன இதழ் பூச்சரமே!
செம்பவளத் தாமரையே!!
சிந்துகின்ற புன்னகையில்
சித்தமது கலங்குதடி!!


அன்றலர்ந்த தாமரையே!
அழகுமலர்த் தேவதையே!
பிஞ்சுமுகம் பார்க்கையிலே
பேசும்மொழி எதுக்கடி?


முல்லை மலர்ப்பூங்கொடியே!
முத்துமணிப் பாச்சரமே!
கொள்ளையிடும் உன்சிரிப்பில்
கோடிசுகம் இருக்குதடி!!
அம்புலியில் அடைக்கலம்
யார் கொடுத்தார்...
கோடையைக் கண்டு
ஒழித்தோடிய குளிர் தென்றலே
வசந்தத்தை வாழவைக்க
கொடுமழை தவிர்த்தாங்கே
காற்றுப் புரவிக்குள்
கார்மேகச் சிக்கெடுக்கக்
கரைகொண்ட கடலாங்கே
நுரைதாங்கி நொடிகிறது.
காய்கின்ற நிலவதனைக்
கானாதேசம் என்றெண்ணி
தளர்நிலைப் பாட்டி - ஆங்கு
கண்ணாலே நீமொழிந்த
வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து
பல்லாயிரம் கவிதை
வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி .


கால்விரல்கள் தீட்டும்
கோலத்தைச் சேர்த்தெடுத்து
ரவிவர்மன் ஓவியத்தையும்
வெல்வேனடி .


நீ சிந்தும் சில்லிடும்
சிரிப்பழகை என்னுள் சேர்த்து
சரித்திரமே படைப்பேனடி .


வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம் என்றெல்லாம் கூப்பிடுவார்கள் கடைசிபிள்ளையாக பிறந்தால் இன்னும் கொஞ்சம் கூட செல்லத்தை பொழிவார்கள் என்ன மாதிரி இடையில பிறந்தால் சிறு சிறு குற்றங்கள்செய்யப்படும் போதெல்லாம் வைக்கப்படும் பெயர்களில் ஒன்று தான் மாடு.

இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த
இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள்
மீட்டபடாத வீணையின் இனிய ராகங்களாய்
மிதந்து நாடி நரம்புகளில் ஓடித்திரிகிறது,,,


தொலை தூர நிலாவில் பார்த்த அழகு முகம்
தெருவோரம் விழி நுகராமல் செல்லும் வேளை
வேதனையின் வடுக்கள் உன் ஞாபகங்களை
வெளிப்படுத்தி இதய கதவுகளை உரசுகிறது,,,

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண் கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
‘இனிது’ எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒள் நுதல் முகனே!”

குறுந்தொகை (167)
பாடியவர்: கூடலூர் கிழார்

அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை
சத்தி இன்றி சிவம் இல்லை
என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார ஒலியாய் தாந்திரீய சைவத்தின் உயிர் நாதமாய் இன்றும் சிவலிங்கத்தை அணைத்தபடி அன்னையவள் நாகபூசணி நாகக் குடை நிழலில் அமர்ந்திருக்கும் திருத்தலமே நயினை நாகபூசணி அம்மன் ஆலயம், அம்பாள் நாககுடைநிழலில் இருந்து அருள்பார்வை பார்க்க சிவன் தாண்டவம் ஆட உலகம் இயங்குகின்றது.

முப்பொழுதுச் சொப்பனத்தில்
முழு நிலவாய் வந்தவளே
யார் நினைவு வந்ததென்று
தேன் நிலவில் பாடுகின்றாய்
காற்றுமிழ்ந்த தேகமதின்
காமத்தீ ஓசை ஒன்றை
சாமத்தீ வரையிசைக்க,
ஓர்மத்தீ உழல் விடலை
யாகத்தீ சுமந்தவளே
நந்தவனப் பூக்களுக்கு
நீயின்றி நாற்றமில்லை,
காந்தர்வ மணம் கொள்ள.
சொந்தவனம் சொல்லிவிடு.
பொங்கியெழு மங்கையெழில்
பூத்த மலரிதழோ!
மங்கையிவள் அங்கமெலாம்
தங்கநிகர் சிலையோ!
பங்கமிலாப் பைந்தமிழில்
பாடுமெழில் உனதோ!
சங்கம்வளர் கங்கைமகள்
தந்தகவி நானோ!
சிந்துகமழ் சந்தணமும்
தந்திடுவேன் நாளும்
வந்துஉயர் தந்துயெனை
வாழ்த்திவிடு நீயும்!
எந்தனுயிர் உள்ளவரை
உன்னைத்தினந் துதிப்பேன்

“அந்தணர் என்போர் அறவோர் மற்(று)
எவ்வுயிர்க்கும்
செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப் பெருமானின் குறளுக்கேற்ப வாழ்ந்துவரும் சிவஸ்ரீ. சம்பு மஹேஸ்வரக் குருக்கள் ஐயா வின் சதாபிஷேகம் நயினை நாகபூஷணி அம்பாள்,அருளாசியுடன் சுதுமலை புவனேஸ்வரி ஆலயத்தில் நடைபெற்றது.

Pages