திரு. சபாரெத்தினம் ஸ்ரீஸ்கந்தராசா

தம்பி சபாரெத்தினம் சிறிஸ்கந்தராசா அவர்களின் பிரிவுத்துயர் 10வது ஆண்டு நினைவலைகள் தம்பி சிறியவனின் பிரிவு ஆண்டு பத்து ஆனாலும் சிறியவனின் நினைவால் வாடுகின்ற மனையாள் மக்களுடன் அண்ணனவனும் உறவுகளும் ஓயாத நினைவலையாய் உள்ளமதில் வாழ்கின்றாய் இவ்வுலகில் நீயவனோ விண்ணுலகில் அன்னையவள் நாகம்மை அருகமர்ந்து அருள்பெற்று எம்மவர்க்கு ஆறுதல்தர அலைகடல் மத்தியில் அமைந்திருந்து அகிலமெல்லாம் அருள்பாலிக்கும் நயினை நாகபூஷணியை வேண்டுகின்றோம் மனிதருள் மாணிக்கமாய் அன்பு நிறைந்த பேரொளியாய் எல்லோருக்கும் நல்லவராய் உயர்வான பண்பாளராய் அன்புடனும் பண்புடனும் பணிவுடனும் நாம்வாழ அறிவுரைகள் பல கூறி இன்சொல்பேசி உறவினர்களை அரவணைத்து வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து இன்று வானுறைந்து தெய்வமாகிவிட்ட எமது குடும்பச்சுடர் சபாரெத்தினம் சிறிகாந்தராசா அவர்களை நினைவுகூரும். மனைவி, மக்கள் அண்ணர் குடும்பத்தினர்

Similar events