2ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் ஸ்ரீமான் குமாரசாமி சாந்தலிங்கம் - 04/05/2013
அப்பா உங்களைப் பிரிந்து இரண்டு ஆண்டுகள் சென்றாலும் என்றும் உங்கள் நினைவு எம்மை விட்டு பிரியாதப்பா.
மறைந்துவிட்ட உங்கள் உறவின்
நீங்காத நினைவுகள்
உதிர்ந்துவிட்ட உங்கள் நினைவின்
உலராத வாசனை
இழந்த அன்பானவரின்
நீங்காத பொழுதுகள்
இதயம் துடிக்கும் வரை
மாறாது நினைப்பு
இயற்கையின் அழைப்பு
மீற முடியாத பயணம்
சென்ற தூரமோ
மீள முடியாத பாதை
கண்முன் உங்கள் விம்பம்
காலத்தை கடந்தும் கலையவில்லை
எம்மை விட்டு பிரிந்த எம் தந்தையே
எம் நினைவை விட்டு பிரிய மறுப்பதேன்???
உன் நிழலை நிஜமாக்கி நிலைத்திருக்கும்
என்றும் உங்களின் நினைவுடன்: குடும்பத்தினர்