விடை தருவாயா

இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த

இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள்

மீட்டபடாத வீணையின் இனிய ராகங்களாய்

மிதந்து நாடி நரம்புகளில் ஓடித்திரிகிறது,,,

தொலை தூர நிலாவில் பார்த்த அழகு முகம்

தெருவோரம் விழி நுகராமல் செல்லும் வேளை

வேதனையின் வடுக்கள் உன் ஞாபகங்களை

வெளிப்படுத்தி இதய கதவுகளை உரசுகிறது,,,

இதமான காற்றுகூட என்னை தொடவிரும்பாமல்

இதயத்தை அழுத்தி நெஞ்சும் வலிக்கிறது

மறுபடியும் உன்பார்வை படும் வேளை எல்லாம்

ஏமாற்றபட்ட ஏழையாய் நின்று எட்டி பார்க்கிறது ,,,,

நம்பிக்கை மீண்டும் மீண்டும் மூளை நரம்புகளை

மீட்டுக்கொண்டே இருக்கிறது கால ஓட்டத்தில்

காதருகில் கதை பேசி கண்கள் சந்தித்து

காது மடல் வருடி மூக்குகள் மூச்சு காற்றை

சுவாசித்து இதழ்கள் பனிக்கும் காலம் வருமா ,,,

அன்பே இல்லை என் இதயமே நின்று போகுமா ,,,,,


Source: Social Media

Author

Sivamenakai

Other blogs

Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிவ மேனகை
Written by: சின்னத்தம்பி குமாரசாமி