நயினை மண்

நாற்புறமும் கடல் சூழ நடுவினிலே சிறு தீவு    நாயகியாய் நாகம்மாள் நிலையான நந்தீவு நம் பரம்பரையைப் பேணிட இப்பாரினிலே ஓர் தீவு    நமக்கெனவே அமைந்த நயினை எனும் தீவு கல்வி கலை கலாச்சாரம் ஒருபோதும் குறையாமல்    காலத்தால் அழியாத காவியமும் புகழ் கூற கன்றாத செழிப்புடனும் குறையாத வளத்துடனும்    குலம் காக்கும் நம்மக்கள் நலம் காக்கும் நம்தீவு. அன்னதான சேவைக்கோர் அமுரசுரபி கொண்டு    அமைதி நிலைகாக்க ஆலயங்கள் பல அமைத்து இன்னல் எதுவுமின்றி என்றும் இன்பமாய் வாழ்ந்திடவே    இயங்கை எமக்களித்த ஓர் இனிய சிறுதீவு. எம் மண்ணும் நயினை மண்ணின் பெருமையையும்    எம் தாய் மொழியாம் தமிழ் மொழியின் மே;மையைப் என்றென்றும் எம்மக்கள் நலம் காக்கும் தொண்டினை    என்றமே உறுதியுடன் இம்மண்ணில் நம் தீபம் தொடருமே. ஆக்கம் : நயினை வாணிஎழுத்துருவாக்கம் : நயினை.கொம்

Other blogs

Written by: கங்கைமகன்
Written by: கங்கைமகன்
Written by: கங்கைமகன்
Written by: சிவ மேனகை
Written by: கங்கைமகன்
Written by: சிவ மேனகை
Written by: சின்னத்தம்பி குமாரசாமி