பிறந்தநாள் வாழ்த்து
மலர்விழி என்ற பெயரைப் பூண்டு
மானின் விழியைக் கண்ணில் கொண்டு
தேனின் மொழியைப் பேச்சில் கொண்ட
பொன்னின் நிறத்தை உடலினில்கொண்டோள்
பொன்விழாக் கண்டாள் இன்று
கழுத்தில் மாலையிட்டால் வாடிவிடும் என்று
எழுத்தில் மாலையிட்டு ஏந்திழையாள்
எண்ணங்கள் யாவும் திண்ணமாய் நிறைவேறி
மண்ணில் மனமகிழ்வோடு மாறாத புகழோடு
வான்மழைபோல் வாழியென்று வாயாரவாழ்த்டுவோம்
நயினை நங்கை
SRI LANKA