குறிகாட்டுவான் நயினாதீவுக்கிடையிலான பாதை பாலம் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் குறிகாட்டுவான் இறங்கு துறையில் இப்பணிகள் நிறைவடைந்துள்ளது. நயினாதீவு இறங்கு துறையிலும் இப்பணிகள் மிகவும் துரித கதியில் நடைபெற்றுவருகின்றது.
2013 பங்குனி மாதம் அளவில் இப்பணிகள் முழுமையாக பூர்தியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நயினாதீவு மக்ளுக்கான வரப்பரப்பிரசாதமாக கருதப்படும் இப்பாதை சேவைமூலம் அதிகளவான பயன்களை எட்டமுடியும்
என்பது குறிப்பிடத்தக்கது